![]() . இலங்கை மாங்குளத்தைச் சேர்ந்தவர் பிரபல கவிஞர் வா.ஐ.ச. ஜெயபாலன். இலங்கையில் நடந்த உள்நாட்டு சண்டை காரணமாக புலம் பெயர்ந்து சென்னையில் வசித்து வருகிறார். மேலும் வெயில், ஆடுகளம், பாண்டிய நாடு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவரது தாயாரின் சமாதி இலங்கை மாங்குளம் பகுதியில் உள்ளது. தாயாரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக அவர் நேற்று இலங்கை சென்றார். மாங்குளம் சென்ற அவர் தன் தாயார் சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு பின்னர் உறவினர் ஒருவரது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நேற்று மாலை 5 மணி அளவில் கவிஞர் ஜெயபாலனை இலங்கை பொலிசார் சுற்றி வளைத்தனர். விசா விதிகளை மீறி விட்டதாக கூறி அவரை கைது செய்தனர். கவிஞர் ஜெயபாலன் சுற்றுலா விசாவில் இலங்கை சென்றிருந்தார். எந்த அடிப்படையில் அவர் விசா விதிகளை மீறினார் என்று தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதை இலங்கை பொலிசாரின் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோகன் உறுதிப்படுத்தியுள்ளார். அதன் பிறகு ஜெயபாலனை சிங்கள அதிகாரிகள் மாங்குளத்தில் இருந்து வவுனியாவுக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இலங்கையில் தமிழர்– சிங்களர் இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதாக சிங்கள உயர் அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர். |
Daily Video





.gif)

Popular Posts
-
தேர்தல் பரப்புரைகளில் நரேந்திரமோடி கடுமையான வார்த்தைகளை பயன்படுத்திவருவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். பஞ்சாப் மாநிலம் பதின்டாவில...
-
குறித்த ஏவுகணை பரிசோதனையை இந்தியா தனது ஒடிஷாவின் பாலசூரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீலர் தீவில் நேற்று காலை 9.10 மணியளவில் வ...
-
இந்தியாவில் உள்ள ஒரே கொரில்லா இன குரங்கான "போலோ" தனது 43 வயதில் நேற்று முன் தினம் மரணமடைந்தது. மைசூர் வனவிலங்குகள் பூங்காவில் வா...
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெ. சொத்து கு...
-
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ அதிகாரி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள...
-
ஜார்க்கண்டில் பாஜகவுக்கு ஆதரவு திரட்டிய இஸ்லாமிய பெண்ணை 12க்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர...
0 comments